December 25, 2019

25 Special features of Tablighi Jamaat

 *(I) The structure of Jamaat*
""""""""""""""""""""""""""""""""""""""""""
1. One Jamaat; one leadership. (1)

2. The world's largest Muslim organization:
▪In more than 150 countries in the world.
▪Around 10 - 15 crore active members. (2)

3. Umumiyyat:
▪The poor & the rich
▪The uneducated & the educated
▪The young & the old
likewise, everyone works together. (3)

4. Disagreements such as legislations are avoided, for all people of different policies of Ahlus Sunnah Wal Jamaat, in order to work together. (4)

5. There is no involvement in politics other than voting. (5)

*(II) The Objectives*
"""""""""""""""""""""""""""""
1. Primary objective:
Self reformation. (6)

2. Secondary objective:
Deen should spread to the whole Ummah. (7)

*(III) The regulations to be followed*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. "Hayatus Sahaba" is a book written to clarify Usools (regulations). (8)

*(IV) The things to be sacrificed*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. His body:
Everyone is a caller towards Deen. (9)

2. His goods:
No wage or reward will be expected from the people. (10)

3. His time:
▪One-tenth as a minimum & one-third as a maximum.
      > Two and a half to eight hours per day.
      > Three to ten days per month.
      > Forty days to four months per year.
      > At least once "four months" in life. (11)

4. Nafeer (going out). (12)

*(V) Amals to be done while going out*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. Be committed to an Ameer and working as a Jamaat. (13)

2. Masjid centered,
▪Taleem - Ta-allum (Teaching - Learning)
▪Dawat - Tabligh
▪Ibadat - Tazkiya
▪Khidmat
similar efforts are made. (14)

*Taleem - Ta-allum*
--------------------------------------
1. First type - Kitab Taleem:
Teaching - Learning from Kitabs like Riyadus Saliheen, Al-Ahadeesul Mundakabah, Fazail-e-Amaal. (15)

2. Second type - Six Sifaat Muzakara:
▪Teaching - Learning by Muzakara of Iman by objectives, virtues & efforts of six sifaats, namely:
▪Kalima Tayyiba, Salah, Ilm - Zikr, Ikramul Muslimeen, Ikhlasun Niyyah, Dawat - Tabligh. (16)

3. Third type - Suhbat:
Teaching - Learning practically by the actions of the practising Muslims by creating an environment of the practising Muslims and engaging the learners in it. (17)

*Dawat - Tabligh*
----------------------------------
1. No media:
Dawat is given the same way as the prophets did; they went to the people's feet without any media. (18)

2. First priority is given to the most important:
Dawat is given on the basis of six Sifaats. (19)

3. Tashkeel (Preparation):
▪For Amals (actions) to be reformed, Iman (belief) should be reformed.
▪The easiest way to reform the Iman is going out in a Jamaat.
▪So, if a Jamaat goes to a town, they give Dawat to the people, prepare them as a Jamaat to go out, and release another Jamaat.
▪Likewise, the Tashkeel will continue in a chain relation. (20)

*(VI) Amals to be done after returning to hometown*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. Masjidwari Five Amals:
▪Daily:
      > Mahalla Mashoora
      > Masjid Taleem, Home Taleem
      > Two and a half to eight hours of effort.
▪Weekly:
      > Mahalla work, neighbor Mahalla work.
▪Monthly:
      > Going out for three to ten days in a Jamaat. (21)

2. Ijtima:
▪Weekly: Jummerath & Ihtikaf
▪Monthly Jod etc. (22)

3. Karguzari, Mashoora & Targheeb (meeting for evaluation, consultation & persuasion):
▪Daily: Mahalla Mashoora
▪Weekly: Halka Mashoora
▪Monthly: Area Mashoora
▪Zone Mashoora
▪Local Markaz Mashoora
▪Delhi Mashoora. (23)

*(VII) Engagement of women*
""""""""""""""""""""""""""""""""""""""""""""
▪Daily five Amals to be done at home:
      > Taleem
      > Tajweed Halka
      > Six Sifaat Muzakara
      > Tashkeel
      > Mashoora
▪Weekly women programme.
▪going out with conditions. (24)

* The changes resulting from this work are being enjoyed and witnessed. (25)
____________________________________________________________________________
_Compiled by: Dr. A.A.M.YASIR (AASIR) (MBBS), +94776470252, 2019.12.20

December 20, 2019

தப்லீக் ஜமாஅத்தின் 25 சிறப்பியல்புகள்

*(I) ஜமாஅத்தின் அமைப்பு*
"""""""""""""""""""""""""""""""""""""""""""
1. ஒரே ஜமாஅத்; ஒரே தலைமை. (1)

2. உலகின் மிகப் பெரிய முஸ்லிம் அமைப்பு:
▪ முழு உலகிலும் 150க்கு மேற்பட்ட நாடுகளில்.
▪10 - 15 கோடி மக்களால் செயல்படுத்தப்படுகிறது. (2)

3. உமூமிய்யத்:
▪ஏழை - பணக்காரர்
▪பாமரர் - படித்தவர்
▪சிறியோர் - பெரியோர்
போன்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவர். (3)

4. அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் சகல கொள்கைக் காரர்களும் ஒன்றாக இணைந்து செயற்படும் வகையில் சட்டதிட்டங்கள் போன்ற கருத்து வேறுபாடுகள் தவிர்க்கப்படுகின்றன. (4)

5. வாக்குரிமையைப் பயன்படுத்துவதைத் தவிர அரசியலில் வேறு எவ்வித ஈடுபாடும் இல்லை. (5)

*(II) நோக்கங்கள்*
""""""""""""""""""""""""""""
1. முதன்மையான நோக்கம்:
தனது சீர்திருத்தம். (6)

2. இரண்டாவது நோக்கம்:
முழு உம்மத்திடமும் தீன் வர வேண்டும். (7)

*(III) செய்ய வேண்டிய ஒழுங்குமுறை*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. உசூல் (ஒழுங்குமுறை)களை தெளிவுபடுத்துவதற்காக எழுதப்பட்ட புத்தகமே "ஹயாதுஸ் ஸஹாபா". (8)

*(IV) செய்ய வேண்டிய தியாகங்கள்*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. தனது உடல்:
ஒவ்வொருவரும் அழைப்பாளரே. (9)

2. தனது பொருள்:
கூலியோ, பிரதிபலனோ மக்களிடம் நாடப்படமாட்டாது. (10)

3. தனது நேரம்:
▪குறைந்தது பத்தில் ஒன்று, கூடியது மூன்றில் ஒன்று என்ற அடிப்படையில்.
     > நாளாந்தம் இரண்டரை தொடக்கம் எட்டு மணி நேரம்.
     > மாதாந்தம் மூன்று தொடக்கம் பத்து நாட்கள்.
     > வருடாந்தம் நாற்பது நாட்கள் தொடக்கம் நான்கு மாதங்கள்.
     > ஆயுளில் குறைந்தது ஒரு தடவை "நான்கு மாதம்". (11)

4. நfபீர் (வெளியாகுதல்). (12)

*(V) வெளியாகி செய்ய வேண்டிய அமல்கள்*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. அமீருக்கு கட்டுப்பட்டு ஜமாஅத்தாக வேலை செய்தல். (13)

2. மஸ்ஜிதையே மையமாக வைத்து
▪தஃலீம் - தஅல்லும் (கற்பித்தல் - கற்றல்)
▪தஃவத் - தப்லீக்
▪இபாதத் - தஸ்கியா
▪ஹித்மத்
போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். (14)

*தஃலீம் - தஅல்லும்*
--------------------------------------
1. முதலாம் வகை - கிதாபு தஃலீம்:
ரியாழுஸ் ஸாலிஹீன், அல்-அஹாதீஸுல் முன்தகபஹ், அமல்களின் சிறப்புகள் போன்ற கிதாபுகள் மூலம் கற்பித்தல் - கற்றல். (15)

2. இரண்டாம் வகை - ஆறு ஸிபாத் முதாகரா:
▪கலிமா தய்யிபா, தொழுகை, இல்ம் - திக்ர், இக்ராமுல் முஸ்லிமீன், இஃலாஸுன் நிய்யஹ், தஃவத் - தப்லீக் ஆகிய ஆறு ஸிபத்துக்களின்
▪நோக்கம், சிறப்பு, முயற்சி அடிப்படையில் செய்யப்படும் ஈமானுக்கான முதாகரா மூலம் கற்பித்தல் - கற்றல். (16)

3. மூன்றாம் வகை - ஸுஹ்பத்:
தீனுடையவர்களுடைய சூழலை உருவாக்கி, கற்பவர்களை அதில் கலந்திருக்கச் செய்வதன் மூலம், தீனுடையவர்களுடைய அமல்களின் மூலம் தீனை செயல் ரூபமாக கற்பித்தல் - கற்றல். (17)

*தஃவத் - தப்லீக்*
--------------------------------
1. ஊடகம் இல்லை:
நபிமார்கள் எவ்வாறு எவ்வித ஊடகமும் இன்றி, மக்களின் காலடிக்கே சென்று தஃவத் கொடுத்தார்களோ அவ்வாறே தஃவத் கொடுக்கப்படும். (18)

2. முக்கியத்துவம் கூடியவற்றுக்கே முதலிடம்:
 ஆறு ஸிபத்துக்களின் அடிப்படையிலேயே தஃவத் கொடுக்கப்படும். (19)

3. தஷ்கீல் (தயார்படுத்துதல்):
▪அமல்கள் சீராக வேண்டுமானால் ஈமான் சீராக வேண்டும்.
▪ ஈமான் சீராகுவதற்கான மிகவும் இலகுவான வழி ஜமாஅத்தில் வெளியாகுவதாகும்.
▪எனவே, ஒரு ஜமாஅத் ஒரு ஊருக்குப் போனால் மக்களுக்கு தஃவத் கொடுத்து, மக்களை ஜமாஅத்தில் வெளியாக தயார்படுத்தி, இன்னொரு ஜமாஅத்தை வெளியாக்கும்.
▪இவ்வாறு இந்த தஷ்கீல் சங்கிலித் தொடர்பில் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். (20)

*(VI) ஊருக்கு திரும்பியதும் செய்ய வேண்டிய அமல்கள்*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. மஸ்ஜித்வாரி ஐந்து அமல்கள்:
▪நாளாந்தம்:
     > மஹல்லா மஷூரா
     > மஸ்ஜித் தஃலீம், வீட்டுத் தஃலீம்
     > இரண்டரை - எட்டு மணி நேர உழைப்பு.
▪வாராந்தம்:
     > மஹல்லா வேலை, பக்கத்து மஹல்லா வேலை.
▪மாதாந்தம்:
     > மூன்று - பத்து நாட்கள் ஜமாஅத்தில் வெளியாகுதல். (21)

2. இஜ்திமா:
▪வாராந்தம்: ஜும்மே ராத், இஃதிகாப்.
▪மாதாந்த ஜோடு போன்றன. (22)

3. கார்குசாரி, மஷூரா, தர்ஃகீப்:
▪நாளாந்தம்: மஹல்லா மஷூரா
▪வாராந்தம்: ஹல்கா மஷூரா
▪மாதாந்தம்: ஏரியா மஷூரா
▪Zone மஷூரா
▪உள்நாட்டு மர்கஸ் மஷூரா
▪டில்லி மஷூரா (23)

*(VII) பெண்களின் ஈடுபாடு*
""""""""""""""""""""""""""""""""""""""""""""
▪நாளாந்தம் வீட்டில் ஐந்து அமல்கள்:
     > தஃலீம்
     > தஜ்வீத் ஹல்கா
     > ஆறு ஸிபாத் முதாகரா
     > தஷ்கீல்
     > மஷூரா
▪வாராந்த பெண்கள் நிகழ்ச்சி.
▪நிபந்தனைகளுடன் வெளியாகுதல். (24)

* இந்த உழைப்பின் மூலமாக உண்டாகும் மாற்றங்கள் கண்கூடாக அனுபவிக்கவும், அவதானிக்கவும் கூடியதாக இருக்கிறது. (25)
____________________________________________________________________________
_தொகுப்பு: Dr. A.A.M.YASIR (AASIR) (MBBS), +94776470252, 2019.12.20_

March 31, 2019

*மகப்பேறு மற்றும் பெண் நோயியல் துறைக்கு பெண் வைத்தியர்களை உருவாக்குவது நீண்ட காலமாக கைவிடப்பட்டிருக்கின்ற ஒரு சமூகக் கடமையாகும்.*

*ஆண், பெண் கலப்பு - ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டம்*

அல்லாஹ் அந்நிய ஆண்களுக்கும் அந்நிய பெண்களுக்குமிடையே திரைமறைவு இருக்க வேண்டும் என ஏவுகிறான். ஏனெனில் அதுவே இரு சாராரது உள்ளங்களுக்கும் பரிசுத்தமானதாகும்.
_"நம்பிக்கை கொண்டோரே!....... (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கு அப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் பரிசுத்தமானது." (அல்குர்ஆன்  33:53)_

மேலும் பெண்கள் தங்கள் அழகு, அலங்காரங்களை அந்நிய ஆண்களைவிட்டும் மறைத்து வாழ வேண்டும் என ஏவுகிறான். எந்தளவுக்கு மறைவாக இருக்க வேண்டுமென்றால், தனது காலில் அணியும் சலங்கை சத்தம் கூட வெளிப்படுத்தப்படக் கூடாது என்கிறான்.
_"தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். (அல்குர்ஆன்  24:31)_

ஒரு பெண் அந்நிய ஆண்கள் நுகரும் வகையில் நறுமணங்களைப் பூசுவாளானால் அவள் ஒரு விபச்சாரிக்கு ஒப்பாவாள்.
_நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவள் ஒரு பெண் மக்கள் நுகரும் வகையில் நறுமணங்களைப் பூசிக்கொண்டு அவர்களுக்கு மத்தியில் செல்வாளானால் அவள் ஒரு விபச்சாரி ஆவாள்." (நூல்: அஹ்மத்-19212, நசாயீ-5126; தரம்: ஹசன்)_

மேலும் பெண்கள் தங்கள் குரலில் நளினம் காட்டக்கூடாது எனவும் ஏவுகிறான். ஏனெனில் அது அந்நிய ஆண்களுக்கு தவறான ஆசையை உண்டாக்கக் கூடும்.
_நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (அல்குர்ஆன்  33:32)_

மேலும் ஆண்கள் அந்நிய பெண்களின் அழகு, அலங்காரங்களை பார்க்கக் கூடாது எனவும் ஏவுகிறான்.
_“(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மர்மஸ்தானங்களை பேணிக்காத்துக் கொள்ளவும்.” (அல்குர்ஆன் 24:30)_

ஆண்கள் அந்நிய பெண்களை எதேட்சையாக பார்க்க நேரிட்டால், உடனே பார்வையை திருப்பிவிட வேண்டும், அந்தப் பார்வையைத் தொடரக் கூடாது என நபி (ஸல்) ஏவியிருக்கிறார்கள்.
_ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் (அந்நிய பெண்கள் மீது) எதேட்சையாக விழக்கூடிய பார்வையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எனது பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறு என்னைப் பணித்தார்கள்.” (முஸ்லிம்: 2159)_

மேலும் ஆண்கள் அந்நிய பெண்களை தொடுவதையும் நபி (ஸல்) தடுத்துள்ளார்கள்.
_மஃகில் இப்னு யஸார் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தனக்கு அனுமதியில்லாத ஒரு பெண்ணை தொடுவதைவிட தன் தலையில் இரும்பு ஊசியால் குத்தப்படுவதே மேலானது." (நூல்: தப்ரானி; தரம்: ஸஹீஹ்)_

ஆண், பெண் கலப்பு சம்பந்தமாக இஸ்லாம் கூறும் வறையறைகளை மீறுவது ஒரு சாதாரண குற்றமல்ல என்பதையே பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
_நபி (ஸல்) கூறினார்கள்: “ஆதமுடைய மகனுக்கு விபச்சாரத்தில் இருந்தும் ஒரு பங்கு எழுதப்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக அவனை அடைந்தே தீரும் (அந்த அடிப்படையில்): கண்கள் செய்யும் விபச்சாரம் (அன்னியப் பெண்ணைப்) பார்ப்பதாகும். நாவு செய்யும் விபச்சாரம் (அவளுடன்) பேசுவதாகும். காதுகள் செய்யும் விபச்சாரம் (அவளின் பேச்சைக்) கேட்பதாகும். கரங்கள் செய்யும் விபச்சாரம் (அவளைப்) பிடிப்பதாகும். கால்கள் செய்யும் விபச்சாரம் (அவளை நோக்கி) நடந்து செல்வதாகும். உள்ளம் அவளை அடைய ஆசைப்படுகிறது. மர்மஸ்தானம் (ஒன்றில்) அதனை உண்மைப்படுத்தும் அல்லது பொய்ப்பிக்கும்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம்)_

இந்த வகையில் இன்று எமது சமூகத்தில் வீடுகள், பள்ளிவாசல்கள், வரவேற்பு மண்டபங்கள், கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள் என எல்லா இடங்களிலும் ஆண், பெண் கலப்பு சம்பந்தமாக இஸ்லாம் கூறும் வறையறைகளை நடைமுறைப்படுத்துவது ஒரு சமூகக் கடமையாகும். அதிலும் குறிப்பாக வைத்தியசாலைகளில் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் துறைக்கு *பெண் வைத்தியர்களை உருவாக்குவது நீண்ட காலமாக கைவிடப்பட்டிருக்கின்ற ஒரு சமூகக் கடமையாகும்.*

யா அல்லாஹ்! சமூகத்திலுள்ள இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து எங்களுக்கு அருள் புரிவாயாக. ஆமீன்.

*தொகுப்பு:*
Dr. A.A.M. YASIR (AASIR) (MBBS),
GALHINNA.
0776470252

*ஆண், பெண் கலப்பு - ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டம்*

*ஆண், பெண் கலப்பு - ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டம்*

அல்லாஹ் அந்நிய ஆண்களுக்கும் அந்நிய பெண்களுக்குமிடையே திரைமறைவு இருக்க வேண்டும் என ஏவுகிறான். ஏனெனில் அதுவே இரு சாராரது உள்ளங்களுக்கும் பரிசுத்தமானதாகும்.
_"நம்பிக்கை கொண்டோரே!....... (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கு அப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் பரிசுத்தமானது." (அல்குர்ஆன்  33:53)_

மேலும் பெண்கள் தங்கள் அழகு, அலங்காரங்களை அந்நிய ஆண்களைவிட்டும் மறைத்து வாழ வேண்டும் என ஏவுகிறான். எந்தளவுக்கு மறைவாக இருக்க வேண்டுமென்றால், தனது காலில் அணியும் சலங்கை சத்தம் கூட வெளிப்படுத்தப்படக் கூடாது என்கிறான்.
_"தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். (அல்குர்ஆன்  24:31)_

ஒரு பெண் அந்நிய ஆண்கள் நுகரும் வகையில் நறுமணங்களைப் பூசுவாளானால் அவள் ஒரு விபச்சாரிக்கு ஒப்பாவாள்.
_நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவள் ஒரு பெண் மக்கள் நுகரும் வகையில் நறுமணங்களைப் பூசிக்கொண்டு அவர்களுக்கு மத்தியில் செல்வாளானால் அவள் ஒரு விபச்சாரி ஆவாள்." (நூல்: அஹ்மத்-19212, நசாயீ-5126; தரம்: ஹசன்)_

மேலும் பெண்கள் தங்கள் குரலில் நளினம் காட்டக்கூடாது எனவும் ஏவுகிறான். ஏனெனில் அது அந்நிய ஆண்களுக்கு தவறான ஆசையை உண்டாக்கக் கூடும்.
_நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (அல்குர்ஆன்  33:32)_

மேலும் ஆண்கள் அந்நிய பெண்களின் அழகு, அலங்காரங்களை பார்க்கக் கூடாது எனவும் ஏவுகிறான்.
_“(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்கள் மர்மஸ்தானங்களை பேணிக்காத்துக் கொள்ளவும்.” (அல்குர்ஆன் 24:30)_

ஆண்கள் அந்நிய பெண்களை எதேட்சையாக பார்க்க நேரிட்டால், உடனே பார்வையை திருப்பிவிட வேண்டும், அந்தப் பார்வையைத் தொடரக் கூடாது என நபி (ஸல்) ஏவியிருக்கிறார்கள்.
_ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் (அந்நிய பெண்கள் மீது) எதேட்சையாக விழக்கூடிய பார்வையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எனது பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறு என்னைப் பணித்தார்கள்.” (முஸ்லிம்: 2159)_

மேலும் ஆண்கள் அந்நிய பெண்களை தொடுவதையும் நபி (ஸல்) தடுத்துள்ளார்கள்.
_மஃகில் இப்னு யஸார் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தனக்கு அனுமதியில்லாத ஒரு பெண்ணை தொடுவதைவிட தன் தலையில் இரும்பு ஊசியால் குத்தப்படுவதே மேலானது." (நூல்: தப்ரானி; தரம்: ஸஹீஹ்)_

ஆண், பெண் கலப்பு சம்பந்தமாக இஸ்லாம் கூறும் வறையறைகளை மீறுவது ஒரு சாதாரண குற்றமல்ல என்பதையே பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
_நபி (ஸல்) கூறினார்கள்: “ஆதமுடைய மகனுக்கு விபச்சாரத்தில் இருந்தும் ஒரு பங்கு எழுதப்பட்டிருக்கின்றது. அது நிச்சயமாக அவனை அடைந்தே தீரும் (அந்த அடிப்படையில்): கண்கள் செய்யும் விபச்சாரம் (அன்னியப் பெண்ணைப்) பார்ப்பதாகும். நாவு செய்யும் விபச்சாரம் (அவளுடன்) பேசுவதாகும். காதுகள் செய்யும் விபச்சாரம் (அவளின் பேச்சைக்) கேட்பதாகும். கரங்கள் செய்யும் விபச்சாரம் (அவளைப்) பிடிப்பதாகும். கால்கள் செய்யும் விபச்சாரம் (அவளை நோக்கி) நடந்து செல்வதாகும். உள்ளம் அவளை அடைய ஆசைப்படுகிறது. மர்மஸ்தானம் (ஒன்றில்) அதனை உண்மைப்படுத்தும் அல்லது பொய்ப்பிக்கும்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம்)_

இந்த வகையில் இன்று எமது சமூகத்தில் வீடுகள், பள்ளிவாசல்கள், வரவேற்பு மண்டபங்கள், கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள் என எல்லா இடங்களிலும் ஆண், பெண் கலப்பு சம்பந்தமாக இஸ்லாம் கூறும் வறையறைகளை நடைமுறைப்படுத்துவது ஒரு சமூகக் கடமையாகும். அதிலும் குறிப்பாக வைத்தியசாலைகளில் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் துறைக்கு *பெண் வைத்தியர்களை உருவாக்குவது நீண்ட காலமாக கைவிடப்பட்டிருக்கின்ற ஒரு சமூகக் கடமையாகும்.*

யா அல்லாஹ்! சமூகத்திலுள்ள இக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து எங்களுக்கு அருள் புரிவாயாக. ஆமீன்.

*தொகுப்பு:*
Dr. A.A.M. YASIR (AASIR) (MBBS),
GALHINNA.
0776470252